சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; ஒடிசா மற்றும் சர்வீசஸ் அணிகள் அபார வெற்றி!
நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, குஜராத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்,
75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-பி பிரிவு ஆட்டத்தில், குஜராத்-சர்வீசஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இதன் மூலம், தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
மற்றொரு குரூப்-பி பிரிவு ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை வீழ்த்தி ஒடிசா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
Related Tags :
Next Story