ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி


ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 13 Oct 2018 9:30 PM GMT (Updated: 13 Oct 2018 8:04 PM GMT)

6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

ஜோஹர் பாரு, 

6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. லீக் ஆட்டத்திலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் குர்சாஹிப்ஜித் சிங் 4–வது நிமிடத்திலும், அபிஷேக் 55–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேனியல் வெய்ட் 7–வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39–வது மற்றும் 42–வது நிமிடத்திலும் கோல் திணித்தனர்.


Next Story