துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 29 Jun 2018 10:45 PM GMT (Updated: 29 Jun 2018 8:50 PM GMT)

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.


* இந்தியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசைப்பிடிப்பு காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

* 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பாலும், துணை கேப்டனாக சவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* 6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. இதில் டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

* தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 22-20, 21-19 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) வெளிே-யேற்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-14 என்ற நேர்செட் கணக்கில் பிரைஸ் விலெர்டெஸ்சை (பிரான்ஸ்) வென்றார்.

Next Story