முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து: கோவை, ஈரோடு அணிகள் ‘சாம்பியன்’


முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து: கோவை, ஈரோடு அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 25 Feb 2019 10:15 PM GMT (Updated: 25 Feb 2019 7:20 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டியில் எல்லா மாவட்ட அணிகளும் கலந்து கொண்டன. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட அணி 25-20, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் சென்னை மாவட்ட அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெல்லை மாவட்ட அணி, கடலூரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் ஈரோடு மாவட்ட அணி நேர்செட்டில் சென்னை மாவட்ட அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் காஞ்சீபுரம் அணி, சேலத்தை விரட்டியடித்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

Next Story