புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி


புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 25 Sep 2019 11:37 PM GMT (Updated: 25 Sep 2019 11:37 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.

ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 107-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 43-34 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. தீபக் ஹூடா (12 புள்ளி), தீபக் நார்வல் (11 புள்ளி) ஜெய்ப்பூர் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

முன்னதாக நடந்த மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 40-39 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை போராடி தோற்கடித்தது. பெங்கால் வீரர் மனிந்தர்சிங், ‘ரைடு’ மூலம் 17 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். 19-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் 12 வெற்றி, 4 தோல்வி, 3 சமன் என்று 73 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இன்றைய லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story