கதாநாயகி துபாய் பறந்தது ஏன்?
மூன்றெழுத்து பிரபல நாயகி, படவிழாவில் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்றெழுத்து பிரபல நாயகி, அவர் நடித்த படவிழாவில் கலந்து கொள்ளாதது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவுக்கு அவர் வராதது ஏன்? என்று கேட்டு தயாரிப்பாளர்கள் கொந்தளித்தார்கள்.
விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுவது அந்த நடிகைக்கு தெரியும். ஊரில் இருந்தால்தானே விழாவுக்கு போக வேண்டியிருக்கும். வெளிநாடு போய் விட்டால். யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று கணக்கு போட்ட அந்த நடிகை துபாய் பறந்து விட்டார் என்று பேசப்படுகிறது!