மத்திய பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் - நிதி மந்திரி
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மந்திரி கூறினார்.
புதுடெல்லி,
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தேபாரத் ரெயில்கள் அறிமுகப்ப்டுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். மெட்ரோ அமைப்புகளை புதிய வகையில் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்றார்.