ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை - மம்தா பானர்ஜி

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-14 16:17 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன.

முன்னதாக, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி இதைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்