கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

உடுப்பியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-26 18:45 GMT

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா காட்பாடி அருகே மூடபெட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த பூஜாரி. இவரது மகள் அனன்யா (வயது 17). இவர் சங்கர்புரா பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்க சென்ற அனன்யா, நேற்று காலை வெகு நேரமாகியும் ெவளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்ேறார், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அனன்யா அறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் காபு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அனன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்