தானே,
தானே நர்போலி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று முன்தினம் பிவண்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் நீச்சல் அடித்து குளிக்க சென்றனர். இதில் 9 மற்றும் 14 வயது சிறுவர்கள் குவாரி தண்ணீரில் மூழ்கினர். இந்த நிலையில் நேற்று அவர்கள் பிணமாக மிதந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.