உல்லாஸ் நகரில் 4 பேரை தாக்கி வழிப்பறி; 6 பேர் கைது

உல்லாஸ்நகரில் 4 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-23 18:45 GMT

தானே, 

உல்லாஸ்நகரில் 4 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்கி வழிப்பறி

உல்லாஸ்நகர் கேம்ப் 3-ம் நம்பர் பகுதியில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட கும்பல் நேற்று முன்தினம் சாலையில் சென்றவர்களை பயங்கர ஆயுதத்தால் தாக்கி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் கேம்ப் 4-ம் பகுதியை சேர்ந்த ரவி நிரபவ், வித்யாதர் பாண்டே, ரோகித் பண்டிட் உள்பட 4 பேர் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் விட்டல்வாடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

இதில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளதாகவும், நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் கும்பல் ஆட்டோவில் வலம் வந்து சாலையில் சென்றவர்களை தாக்கி சென்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்