நவிமும்பையில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது

தானே நவிமும்பை பகுதியில் போதை பொருள் வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-08-06 20:15 GMT

தானே, 

நவிமும்பை கோப்ரி கிராமத்தில் உள்ள தெருவில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 21 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல நேற்று முன்தினம் மீண்டும் அங்கு நடத்திய சோதனையில் கவிதா ராதோட் என்ற பெண் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிடிபட்டார். இவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 5 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.63 ஆயிரம் ஆகும். இவர்கள் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்