அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-29 18:19 GMT

மும்பை, 

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் காரணமாக சிவசேனா கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் உத்தவ் தாக்கரே கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தன்னிடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், ஆத்திய தாக்கரே அவருக்கு எதிராக கடுமையாக களமாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் பேசுகையில் "கட்சியில் இருந்து அழுக்கு போய்விட்டது. இனிமேல் ஏதாவது நல்லது செய்யலாம்" என்றார்.

ஏற்கவே அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை துரோகிகள் என கூறியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்