4 வயது சிறுமியை கடத்தி சென்ற முதியவர் கைது

நவிமும்பையில் 4 வயது சிறுமியை கடத்தி சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-26 19:15 GMT

நவிமும்பை, 

நவிமும்பையில் 4 வயது சிறுமியை கடத்தி சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கடத்தல்

நவிமும்பை நெரூல் ரெயில் நிலையம் அருகே குடிசை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவள் நேற்று முன்தினம் திடீரென காணாமல் போய் விட்டாள். பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடிவந்தனர். இதில் முதியவர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றதும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க ஆட்டோக்களில் மாறி மாறி தப்பி சென்றதும் தெரியவந்தது.

முதியவர் பிடிபட்டார்

இறுதியாக அவர் தாராவே கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று முதியவர் மணி தாமஸ் (வயது74) என்பவரை பிடித்து கைது செய்தனர். கடத்தி சென்ற சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், முதல் மனைவி உயிரிழந்து விட்டதால் 2-வது திருமணம் செய்துள்ளார். 2-வது மனைவிக்கும் குழந்தை இல்லை. எனவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்