மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 6½ ஆண்டு கடுங்காவல்

தானேயில் மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 6½ ஆண்டு கடுங்காவல் தண்டனை

Update: 2023-08-12 20:45 GMT

தானே, 

தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சோமேஷ் கதம் (வயது30). கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் சோமேஷ் கதமை வெறுத்த மனைவி தனக்கு விவாகரத்து தரும்படி கேட்டு உள்ளார். மேலும் 5 மாத பெண் குழந்தையை மைத்துனருக்கு தத்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோமேஷ் கதம் அதே ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி கூர்மையான ஆயுதத்தால் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரது மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். இது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் சோமேஷ் கதமை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தானே கோர்ட்டில் ஆஜர்டுத்தினர். வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 6 ஆண்டு 8 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்