5 வயது சிறுமியை கடத்தியவர் கைது; போலீசார் விசாரணை

5 வயது சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-26 18:45 GMT

மும்பை, 

5 வயது சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி கடத்தல்

மும்பை வில்லே பார்லே மேற்கு பகுதியில் 5 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி சிறுமியை அவளது தந்தையின் நண்பரான அஜித்பவார் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார். இதன்பின்னர் அவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அஜித்பவாரை தொடர்பு கொள்ள முயன்றனர். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் அவர்கள் ஜூகு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரது செல்போன் நம்பர் மூலமாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமும் அஜித்பவாரை தேடி வந்தனர்.

நண்பர் கைது

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுமியை அஜித்பவார் ஜோகேஸ்வரி மேற்கு பகுதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்து 48 மணி நேரத்தில் போலீசார் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்