தானேயில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கியவருக்கு வலைவீச்சு

தானேயில் தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2023-08-27 19:45 GMT

தானே, 

வாக்ளே எஸ்டேட் அம்பேவாடியை சேர்ந்தவர் ராஜேஷ் யாதவ்(வயது36). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் இனிப்பு பலகாரம் விற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் ராஜேஷ் யாதவின் அனுமதியின்றி அவரது கடையில் இருந்து இனிப்பு பலகாரத்தை எடுத்து சென்றார். இதனை கண்ட ராஜேஷ் யாதவ் அவரை சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்த எடைக்கற்களால் ராஜேஷ் யாதவை தாக்கினார். பின்னர் அவரை அங்குள்ள கொதிக்கும் எண்ணெய் சட்டி மீது தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜேஷ் யாதவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்