'வாட்ஸ்அப்'பில் அழகிகள் படத்தை அனுப்பி விபசாரம் - 2 பேர் கைது

போரிவிலியில் ‘வாட்ஸ்அப்’பில் அழகிகள் படத்தை அனுப்பி விபசாரம் நடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர்

Update: 2023-08-19 19:15 GMT

மும்பை, 

மும்பை போரிவிலி சஞ்சய் காந்தி பூங்கா அருகே வாட்ஸ்அப் மூலம் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி சென்ற காரை வழிமறித்தனர். காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் 3 பெண்களும் விபசார அழகிகள் என்பதும், மற்ற 2 பேர் விபசார தொழில் நடத்துபவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபசார தொழில் செய்து வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்