அடுக்குமாடி வீட்டில் ஒருவர் பிணமாக மீட்பு

தானே கோட்பந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்

Update: 2023-08-28 19:00 GMT

தானே, 

தானே கோட்பந்தர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மனோஜ்குமார் பிபின் குப்தா (வயது51). கடந்த சில நாட்களாக நண்பர் ஒருவர் மனோஜ்குமாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். பல முறை முயற்சி செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர் தானே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் மனோஜ்குமாரின் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். வீட்டின் உள்ளே அவர் அழுகியநிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனோஜ்குமார் உயிரிழந்து 4, 5 நாட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்