வீடு, கடைகளில் புகுந்து திருடிய வாலிபர் கைது; ரூ.18 லட்சம் பொருட்கள் பறிமுதல்

வீடு, கடைகளில் புகுந்து திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Update: 2023-10-22 18:45 GMT

மும்பை, 

பிவண்டி, தானே, பட்கா போன்ற இடங்களில் வீடு மற்றும் கடைகளில் புகுந்து திருட்டு, வாகன திருட்டு சம்பவம் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நார்போலி பண்டாரி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த அருண் துபே (வயது20) என்பவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிள், மடிக்கணினிகள், செல்போன்கள், 30 டிஜிட்டல் கேமராக்கள் உள்பட மொத்தம் ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்