நாசிக்கில் பயங்கரம்; 2 பேர் குத்திக்கொலை - கும்பல் வெறிச்செயல்

நாசிக் அம்பாத் எம்.ஐ.டி.சி பகுதியில் ; 2 பேர் குத்திக்கொலை செய்யபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சம்மந்தப்பட்ட கும்பலை தேடி வருகின்றனர்

Update: 2023-08-11 19:30 GMT

நாசிக், 

நாசிக் அம்பாத் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள சஞ்சீவிநகரில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் நண்பர்களான அஸ்கர் அலி கான்(வயது18), அவரது நண்பர் இப்ராகிம் ஹசன் சேக்(23) ஆகிய 2 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 7 முதல் 8 வாலிபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கும்பல் நண்பர்கள் 2 பேரையும் கூரிய ஆயுதங்களால் குத்தி விட்டு தப்பியது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். இதில் அஸ்கர் அலி கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் உயிருக்கு பேராடிக்கொண்டு இருந்த இப்ராகிம் ஹசன் சேக்கை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக அம்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை வலைவீசி தேடினர். இதில் 4 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடிவருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தை தொடர்ந்து நாசிக்கில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்