சிக்னல் கோளாறால் ரெயில்கள் தாமதமாக இயக்கம்- பயணிகள் அவதி

Update:2022-12-16 00:15 IST

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் ஜூயு நகர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த மின்சார ரெயில்கள் வாஷி நோக்கி செல்ல முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மேலும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே-நெரூல் இடையேயும் மின்சார ரெயில்கள் நடுவழியில் நின்றது. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி அங்கு ஏற்பட்ட சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதன்பின்னர் மின்சார ரெயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்பட்டது. இதன் காரணமாக காலை வேளையில் வேலைக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்