மும்பை, வசாய் விரார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது

மும்பை, வசாய் விரார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-28 17:50 GMT

வசாய், 

பால்கர் மாவட்டம் வசாய் மற்றும் விரார் பகுதியில் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் கடந்த 26-ந்தேதி 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.24 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைபறிமுதல் செய்தனர்.

இவர்கள் மும்பை உள்பட வசாய், விரார் போன்ற இடங்களில் 17 வழக்குகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்