உத்தர பிரதேச அதிகாரி தற்கொலை
உத்தர பிரதேச அதிகாரி தற்கொலை செய்துகொண்டார்;
மும்பை,
உத்தர பிரதேச மாநில சுற்றுலா துறை துணை இயக்குனர் விமலேஷ் குமார். இவர் பணியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜினாமாவை ஏற்காமல் அவர் மும்பைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் செம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் நேற்று கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.