வசாயில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

வசாயில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-10-22 20:00 GMT

வசாய், 

பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு கிரிஜ் பகுதியில் கடந்த 8-ந்தேதி அங்குள்ள கோவிலில் அதிகாலை 2 மணி அளவில் ஒருவர் உள்ளே புகுந்தார். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு தப்பி சென்றார். மறுநாள் காலை பூசாரி வந்தபோது உண்டியலில் திருட்டு போன சம்பவம் தெரியவந்தது. இது பற்றி அவர் வசாய் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் நடத்திய ஆய்வில் திருட்டு ஆசாமி நாலாச்சோப்ராவை சேர்ந்த சபீர் சேக் (வயது26) எனவும், உண்டியலில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஐ திருடி விட்டு அங்கிருந்த ஆட்டோவில் ஏறி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சபீர் சேக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருட்டுக்கு பயன்படுத்தியது திருட்டு ஆட்டோ எனவும், இவர் மீது ஏற்கனவே வாலிவ், வசாய், மாணிக்பூர் பகுதிகளில் 3 வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்