விக்ரோலியில் கொட்டகை இடிந்து விழுந்து வாலிபர் பலி

விக்ரோலியில் கொட்டகை இடிந்து விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்

Update: 2023-10-20 19:30 GMT

மும்பை, 

மும்பை விக்ரோலி கன்னம்வார்நகர் பகுதியில் மகாடாவிற்கு சொந்தமான கட்டிடம் 2-ம் நம்பர் பகுதியில் நிலத்தடி நீர் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியின் மீது தற்காலிகமாக கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12.15 மணி அளவில் திடீரென கொட்டகை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த ராஜேந்திரா (வயது35) என்ற வாலிபர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வாலிபர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து விக்ரோலி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்