பவாயில் முன்விரோதத்தில் வாலிபர் கொலை

மும்பை பவாய் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் கத்தியால் குத்தி கொலை

Update: 2023-08-01 19:30 GMT

மும்பை, 

மும்பை பவாய் ரமாபாய் தெருவை சேர்ந்தவர் கிஷோர் கெய்க்வாட்(வயது32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திப் பிராரே என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பொது இடத்திற்கு வந்த கிஷோர் கெய்க்வாட்டிடம் சந்திப் பிராரே வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்திப் பிராரே தான் வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் கெய்க்வாட் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திப் பிராரேவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்