வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-09-05 16:31 GMT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கபாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 363-ன் கீழ் (கடத்தல்) 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்