சென்னை கோயம்பேட்டில் பல்துறை கண்காட்சி - அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் பல்துறை கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

Update: 2022-03-27 10:09 GMT
சென்னை,

சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது. 

பள்ளிக்கல்வித்துறை, செய்தி, மக்கள் தொடர்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆவின், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் மொத்தம் 20 அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த  சாராம்சங்களை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்