திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-24 20:07 IST

மன்னார்குடி:-

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை என அறிவித்த மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி மேல ராஜவீதியில் உள்ள பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் கவிபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.க. பேச்சாளர் சிங்காரவேலு கலந்து கொண்டு பேசினார். இதில் தி.க. மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்