அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-06 19:30 GMT

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்