பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி -பல்லடம் ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்தப்பகுதியில் கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்த பொள்ளாச்சி நந்தனார் காலனியை சேர்ந்த வெங்கடாச்சலம் (வயது 60) என்பவரை கைது செய்தனர். ேமலும் அவரிடம் இருந்து 42 கேரளா மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.1700 பறிமுதல் செய்யப்பட்டது.