மதுக்கடைகள் நாளை மூடல்
சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூடப்படும்.;
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் வருகிற 9-ந் தேதி மிலாடி நபி ஆகிய தினங்களை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற கிளப், ஓட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் உள்ள மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.