வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

Update: 2022-10-08 18:45 GMT

வாணியம்பாடி

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 30). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிஷா தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக திருப்பத்தூர் சென்றிருந்தார். ஆயிஷாவின் வீடு பூட்டியே கிடந்ததால் அதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர்.நேற்று முன்தினம் இரவு ஆயிஷா வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்ததையும் அதிலிருந்த நகை, பணம் திருட்டு போயிருந்ததையும் பார்த்த்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த ஆயிஷா வீட்டில் உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து தடயங்ளை சேகரித்தனர். அதன்படி திருடர்கள் குறித்து விசாரித்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்