செல்போன்களை பதுக்கிய 10 கைதிகள் மீது வழக்கு

செல்போன்களை பதுக்கிய 10 கைதிகள் மீது வழக்கு;

Update:2023-03-18 00:15 IST

கோவை

கோவை மத்திய சிறையில் செல்போன்கள் பதுக்கிவைத்து இருந்த 10 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மத்திய சிறை

கோவை மத்திய சிறையில் 2,000-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் கைதிகள் பயன்படுத்தாமல் இருக்க ஜெயிலர்கள்தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேஸ்கோர்ஸ் போலீசார், சிறை காவலர்களுடன் இணைந்து கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

10 கைதிகள் மீது வழக்கு

இந்தநிலையில் கோவை மத்திய சிறையில் ஜெயிலர் சிவராஜன் தலைமையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சிறை முழுவதும் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் கைதிகள் 10 பேர் செல்போன்களை பதுக்கி வைத்து பேசி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் செல்போன்களை பதுக்கி வைத்து பயன்படுத்திய கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை மத்திய சிறைக்குள் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வந்த 10 கைதிகள் மீது தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்