கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-05-17 19:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கல்வராயன்மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது தாழ்மொழிபட்டு ஓடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 7 பிளாஸ்டிக் பேரல்களில் போடப்பட்டிருந்த சுமார் 1,400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் சாராயத்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவற்றை கீழே கொட்டி அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்