கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-09-13 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக கரியாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்போில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையலான போலீசார், கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அங்கு சாராய ஊறல் அமைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்