மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி இறந்தார்.;

Update:2023-01-06 00:51 IST

விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலஹாசன் (வயது 33). விவசாயியான இவர் கடந்த 3-ந் தேதி அவரது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை விஷயமாக வெளியில் சென்றார். பின்னர் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மாத்தூர் அருகே சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கமலஹாசன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த கமலஹாசனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலஹாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்