இலவச கண் பரிசோதனை முகாம்

திண்டுக்கல்லில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2023-05-21 19:00 GMT

திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவினர்கள் வந்து பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ஒரு சிலருக்கு கண் கண்ணாடி அணியவும் பரிந்துரை செய்தனர். முகாமில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் குப்புசாமி, அழகர்சாமி, நாட்டாண்மை காஜாமைதீன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்