நாமக்கல்லில் பலத்தமழை

நாமக்கல்லில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.;

Update:2023-08-11 00:15 IST

பலத்தமழை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேந்தமங்கலம் பகுதியில் 27 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-

சேந்தமங்கலம்-27, மங்களபுரம் -23, கொல்லிமலை -22, ராசிபுரம்-15, கலெக்டர் அலுவலகம்-12, திருச்செங்கோடு-11, புதுச்சத்திரம்-8, நாமக்கல் -7, குமாரபாளையம்-3, பரமத்திவேலூர்-3. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 131 மி.மீட்டர் ஆகும்.

வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் லேசான சாரல்மழை பெய்தது. மாலை 4 மணி அளவில் வானத்தில் கருமேகம் திரண்டு திடீரென மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் குட்டை தெரு, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது. இவற்றில் இருசக்கர வாகன ஓட்டிகள் தத்தளித்தவாறு சென்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சீ தோஷ்ண நிலை ஏற்பட்டது. இந்த மழையால் விவசாய நிலங்கள் மற்றும் ஏரிகள், குட்டைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்