திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-03 20:30 GMT

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வுக்கு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் உதவி மையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த உதவி மையம் வருகிற 30-ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

எனவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்கு உதவி மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 93845 02744, 80569 25598 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டும் பேசலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்