அந்தியூரில் ரூ.2¼ லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூரில் ரூ.2¼ லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.;
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 105 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.இதில் நிலக்கடலை (பச்சை) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 419-க்கும், (காய்ந்தது) குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 505-க்கும், அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்து 656-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 392-க்கு விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், தர்மபுரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நிலக்கடலையை ஏலம் எடுத்து சென்றனர்.