சுப்பிரமணியபுரம்சித்தி விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா
சாயர்புரம் அருகே சுப்பிரமணியபுரம்சித்தி விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சித்தி விநாயகர் கோவில் 20-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர் விநாயகருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்