சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் அத்தியூர் காட்டுவழி பாதையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, விரியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 27) என்பவர் , அந்தபகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.