சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.;
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 50) என்பவர், முருகன் கோவில் அருகில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.