வேலூர் சங்கரன்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 47). இவர் தனக்கு சொந்தமான லாரியை சம்பவத்தன்று சங்கரன்பாளையத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்தார். அந்த லாரி திருட்டு போனது. இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் குமரேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் லாரியை திருடியதாக சங்கரன்பாளையம் முத்துப்பிள்ளைதெருவை சேர்ந்த லோகநாதன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.