புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

நெய்வேலி புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

Update: 2023-02-02 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலியில் பழமையானதும், புகழ்பெற்றதுமான புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்கு ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வண்ண மின் விளக்குகளால் ஆலயம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தினமும் மாலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை அருட்தந்தை ஜோசப் பவுல் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஆடம்பர தேரில் புனித காணிக்கை அன்னை சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் அல்போன்ஸ், நிர்மல் ராஜ், சைமன், அந்தோணிராஜ், ஜான் கென்னடி, குளூனி அருட் சகோதரிகள், பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஆடம்பர தேர் பவனி, வாண வேடிக்கைகளுடன் மத்திய பஸ் நிலையம், 8 ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்