சாராயம் கடத்திய மூதாட்டி கைது

காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்திய மூதாட்டி கைது

Update: 2023-09-25 18:45 GMT

 நாகை புதிய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீசார், அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மருந்து கொத்தள சாலை திரவுபதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சந்திரா (63) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து விற்பனைக்காக சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்