விபத்தில் முதியவர் பலி

Update: 2023-09-18 19:00 GMT

நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் மோட்டார் சைக்கிளில் எர்ணாபுரம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனிசாமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்