நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ரூ.8 லட்சத்துக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

Update: 2022-06-05 16:50 GMT

நாமக்கல்:

உழவர்சந்தை

நாமக்கல்லில் கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

உழவர் சந்தைக்கு நேற்று 19¾ டன் காய்கறிகள் மற்றும் 4¾ டன் பழங்கள் என மொத்தம் 24½ டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,150 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று கத்தரி கிலோ ரூ.44-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.25-க்கும், புடலங்காய் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.60-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.52-க்கும், கேரட் கிலோ ரூ.48-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.52-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.44-க்கும், இஞ்சி கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.22-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.26-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து இருந்ததால், அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்